அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:


(மனிதர் சிந்தித்து ஆராய்ந்து) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு ந்த குர்ஆனை நிச்சயமாக நாம் மிக்க எளிதாக்கியிருக்கிறோம். எனவே (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா? (அல்குர்ஆன் 54:17)

எனவே குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக நன்கு படியுங்கள்.அப்போது தான் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதை அறிய முடியும். மேலும் (குர்ஆனை) சத்தியத்தை அறிந்து பின்பற்றினால்தான் மறுமையில் வெற்றி காண முடியும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய நல்பாக்கியத்தை தந்தருள்வானாக!