மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே நான்கு மத்ஹப் இமாம்களின் எச்சரிக்கை

இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

        நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடை முறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய்  இருங்கள்.  மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.
இமாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

       
"மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ,அவன் நபி(ஸல்) அவர்கள் தனது ரிஸாலத்தில்(தூதுவப் பணியில்) மோசடி செய்து விட்டார்கள் என்றே கருதுகிறான்.எனேன்றால், அல்லாஹ், "அல்யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்......என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக இல்லாதது ன்றும் மார்க்கமாக ருக்க முடியாது.
இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

        எவன்  மார்க்கத்தில் புதிதாக ஒன்றை  உண்டாக்கி, அதை பித்அத்து ஹஸனா என்று சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே  உண்டாக்கி  விட்டான்.

இமாம் அஹ்மது ப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

        எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது:ரசூல் (ஸல்)  அவர்களும்,  அவர்களது தோழர்களும்  இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும்.   நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ


மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துபவர்களை, நபி (ஸல்) அவர்கள் எவ்வாறெல்லாம் நம்மை எச்சரித்துள்ளார்கள் என்பதை படிக்க...