தப்லீக் ஜமாஅத்

இந்தியாவின் தமிழகத்திலே நெய்வேலி எனும் ஊரைப் பிறப் பிடமாகக் கொண்டவர்தான் சகோதரர் M.யூஸுஃப் பாய் அவர்கள். சிறுபிராயத்திலிருந்தே அழைப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். மிக நீண்டகாலமாகவே தப்லீக் ஜமாஅத் அமைப்பில் இணைந்து செயற்பட்டு பல்வேறு இடங்களுக்கெல்லாம் நீண்ட நேரங்கள் சென்று பல தப்லீக் பெரியார்களைச் சந்தித்து அளவலாவிய அனுபவங்கள் அவர்களுக்கு நிறையவே உண்டு.
தப்லீக் அமைப்பிலுள்ள பல விஷயங்கள் குர்ஆன் ஹதீஸிற்கு முரணாவதாக அவரது மனம் உறுத்தவே பெரியார்களிடம் அது பற்றிக் கேட்க, அவர்கள் சொன்ன பதில் திருப்தியளிக்காததால் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு குர்ஆன் ஹதீஸின் பிரகாரம்  அழைப்புப்பணி செய்யும் அமைப்புகளோடு இணைந்து கொண்டார்.
அல்ஜுபைல் தஃவா நிலைய த்தில் நீண்ட காலமாகவே தன்னார்வத் தொண்டராக அழைப்புப்பணியில் ஈடுபட்டு வந்த இவர், அழைப்பாளர்களுக்கு ஒரு முன்மாதிரியானவராக பல அருங்குணங்கள் மிக்கவராயிருந்தார். அவர்தான் மேற்படி தலைப்பில் ஒரு நூல் எழுதும் எண்ணம் எனக்கு இருப்பதாக சொன்னபோது என்னை ஊக்கப்படுத்தி இப்படியான ஒரு நூல் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி அதற்கான துணை நூல்கள் பலவற்றையும் தேடியெடுத்துத் தந்து உதவியவர். பின்னர் அவரே இந்த நூல் முற்றுப் பெற்றதும் அதனைப் பெற்று சரிபார்த்தும் தந்தார்.
அன்னார் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தொன்றில் திடீர் மரணமடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸைக் கொடுப்பானாக. ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
முன்னுரை
புகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள், குடும்பத்தவர்கள், அவர்களின் வழிநடந்தோர் அனைவர் மீதும் உண்டா கட்டுமாக. ஆமீன்.
தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்கு முன் இதன் ஸ்தாபகர்களும் இயக்குனர்களுமான சூஃபிகள் பற்றி – இவர்களது கொள்கை கோற்பாடுகள் பற்றி அறிவது இன்றியமையாததாகும்.
இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் ‘தரீக்காக்கள், சூஃபித்துவம், சூஃபிகள்’ போன்ற சொற்பிரயோகங்கள் அனைவருக்கும் மத்தியில் பரிச்சயமானதாகும். ஆனால் இதன் கருத்தோட்டம் எவ்வாறு இவர்கள் மத்தியில் புரிந்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்க்கும் போதே ஆச்சரியம் கலந்த வேதனையை அளிக்கின்றது.
சாதாரண முஸ்லிம் சமூகத்தினர் பண்டிதர் முதற்கொண்டு பாமரர் வரைக்கும், ‘சூஃபிகள் எனப்படுவோர் இறைநேசச் செல்வர்கள். தொழுகை, நோன்பு, திக்ர், போன்ற இன்ன பல வணக்கங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள்., இதனால் சாதாரண மக்களை விட ஒருபடி மேலேசென்று அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றவர்கள் என்றும், முழுக்க முழுக்க இஸ்லாமிய அனுஷ்ட்டானங்களைப் பின்பற்றி நடப்பவர்கள் இவர்கள்தான்’ என்பது போன்ற ஒரு போலியான கருத்துக் கண்ணோட்டமும் அதிகப்படியான முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் புரையோடிப் போயிருப்பதை வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது. எனவே சூஃபித்துவம் என்றால் என்ன? இது எங்கிருந்து தோற்றம் பெற்றது? இதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதுபற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இது எந்தளவு முரண்பட்டு நிற்கின்றது போன்ற விடயங்களைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துவதே இப்பிரசுரத்தின் நோக்கமாகும்.
அதே போன்று இன்று நவீன சூஃபித்துவமாக விஷ்வரூபமெடுத்து இதே சூஃபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளின் நிழலில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஒரு அமைப்புதான் தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும். இது இன்று பாமர மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்று தீன் வழி நடக்கும் ஒரே அமைப்பு என்றும், இதிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள் தீனை விட்டும் தூரமானவர்கள் என்றும் தப்புக்கணக்குப் போட்டுப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் அமைப்பாகும். இவ்வமைப்பின் அடிப்படை விதிகள் எப்படி சூஃபித்துவக் கருத்துக்களைச் சார்ந்திருக்கின்றன என்றும், இதன் ஆரம்ப ஸ்தாபகர்கள், சமகால முக்கியஸ்த்தர்களுக்கு சூஃபித்துவத்துடன் இருக்கும் தொடர்பு பற்றியும் முடிந்தளவு சுட்டிக் காட்டுவதும் இப்பிரசுரத்தின் நோக்கமாகும்.
அத்துடன் உலகிலுள்ள முக்கிய மார்க்க அறிஞர்கள், முஃப்தீகள் போன்றோர் இவ்வமைப்புப் பற்றி வெளியிட்டுள்ள ஃபத்வாக்கள் சிலவற்றையும் எடுத்துக் காட்டுவதுடன் நபியவர்களுடைய தூய சுன்னாவுக்கு எந்ததெந்த வகையில் இவ்வியக்கத்தின் செயல்முறைகள் பல முரண்பட்டு நிற்கின்றன என்றும் முடிந்தளவு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
எனவே அல்லாஹ் எம்மனைவருக்கும் இஸ்லாத்தை அல்குர்ஆனின், தூய சுன்னாவின் ஒளியில் நபித் தோழர்களும், தாபியீன்களும் விளங்கியது போல் அதே வழியில் விளங்கி அதன்படி செயற்பட்டு ஈருலகிலும் வெற்றிபெற்றிட அருள் பாலிப்பானாக ஆமீன்..
இஸ்லாத்தில் மெஞ்ஞானமா?
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமு தாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்குர் ஆனை அருளினான். நபியவர்களும் உலக மக்கள் அனை வருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள், பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள். அவர்களது வழிமுறையினை நாம் ‘சுன்னா’ என்று அழைக்கின்றோம். நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து செல்லும் போது இவ்வாறு கூறினார்கள்..
‘மக்களே நான் உங்களைத் தெட்டத் தெளிவானதொரு பாதையிலே விட்டுச் செல்கின்றேன் அதன் இருள் சூழ்ந்த இரவு ப்பகுதி கூட பட்டப்பகலைப் போல் பிரகாசமிக்கதாய் விளங் குமளவுக்கு அவ்வழி மிகத் தெளிவான வழியாகும். தன்னைத் தானே அழிவின் பக்கம் போட்டுக் கொள்ளும் துரதிஷ; டமிக்கவனைத் தவிர வேறு எவரும் இவ்வழியை விட்டும் தடம் புரண்டு செல்ல மாட்டார்கள் ‘ ( இப்னு மாஜா 43 )
மேலும் கூறியுள்ளார்கள், “நான் உங்கள் மத்தியில் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் பலமாகப் பற்றிப் பிடித்திரும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறிவிட மாட்டீர்கள், அவைதான் ஒன்று அல்குர்ஆன் அடுத்தது எனது குடும்பத்தினரின் வழிமுறையாகும்’ என்றார்கள். ( முஸ்லிம் 2137 )
நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘ஒரு முறை நபியவர்கள் நீண்டதொரு கோட்டினை வரைந்தார்கள். பின் அக்கோட்டுக்கு வலது இடது புறமாகப் பலகோடுகளை வரைந்தார்கள். பின்பு இதோ இருக்கும் நேர்கோடு (போன்றது) தான் நான் உங்களுக்குக் காட்டிய வழிமுறையாகும். அதற்குக் குறுக்கே இரு மருங்கிலும் இருக்கும் பாதைகள் ஷைத்தானுடைய பாதைகளாகும். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஷைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறி விட்டுப் பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيماً فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
‘நிச்சயமாக இது தான் எனது நேரான பாதையாகும், எனவே இதையே நீங்கள் பின்பற்றுங்கள் (இதுவல்லாத) வேறு பாதைக ளைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் அவை நேரான வழியை விட்டும் உங்களைப் பிரித்துத் தடுத்திடும். நீங்கள் நல்லறிவு பெறவேண்டுமென்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு இந்த உபதேசத்தைச் செய்கின்றான். ( அல் அன்ஆம் 153 )
எனவே மேற்படி நபிமொழிகளிலிருந்து நபியவர்கள் அனைத்து முஸ்லிம்களையும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் வழியிலேயே நடக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருப்பதுடன் அதைப் புறக்கணித்து வேறு வழியில் நடக்க முற்படும் போது நிச்சயமாக அது வழிகேட்டின் பக்கமே இட்டுச் செல்லும் என்றும் எச்சரித்திருப்பதை அறிய முடிகின்றது.
சூஃபித்துவம் என்றால் என்ன?
சூஃபித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான வரை விலக்கணத்தை சூஃபித்துவ வாதிகளின் நூல்களில் கூட விரிவாகக் காணமுடியவில்லை. எனினும் அவர்களது கருத்துக்கள் சிந்தனைப் போக்குகளிலிருந்து இவ்வாறு விளங்க முடிகின்றது.
சூஃபித்துவம் என்பது ‘இஸ்லாமியப் போர்வையில் உருவாக்கப்பட்ட யூத, கிருஸ்தவ, கிரேக்கம் போன்ற மாற்று மத தத்துவங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட சித்தாந்தங்களை அடிப்படையாக வைத்து துறவரம் பூண்டு ஆத்மீகவழி நடப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு கொள்கைக்கே சூஃபித்துவம் எனப்படும் ‘ இதன் வழி நடப்பவர்கள் சூஃபிகள் என அழைக்க ப்படுவார்கள்.
எனவே பாமர மக்கள் நம்புவதைப் போன்று உலக ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி ஆத்மீகப் பாதையின் பக்கம் அழைப்பதே சூஃபித்துவம். சூஃபிகள் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற இறைநேசச் செல்வர்கள் என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான மூடத்தனமான கருத்தாகும்.
சூஃபித்துவம் பற்றி எடுத்துக் கூறிய தமிழ் நூல்கள் கூட இவர்களின் யதார்த்த நிலை பற்றிப் பெரிதாக ஆராயாது இதைப் பற்றி நல்லபிப்பிராயம் தெரிவித்திருப்பதன் விளைவே இந்த இறை மறுப்புச் சித்தாந்தம் இன்று பாமர மக்கள் மத்தியில் பரவி நன்மதிப்பைப் பெற்றுள்ளது. எனவே இதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதற்கும் நபிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மாறாக நபியவர்கள் கூறியது போல் சீரிய நபிவழியை விட்டும் நெறி தவறிய வழிகெட்ட கூட்டங்களில் மிகமிக வழிகெட்ட கூட்டத்தினரே இந்த சூஃபித்துவ வாதிகள் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.


சூஃபித்துவத்தின் தோற்றம்
இவ்விடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது அல்லாஹ்வின் பகிரங்க விரோதியான ஷைத்தான் மனித சமூகத்தை நேர்வழியை விட்டும் திசை திருப்பி நரகத்தில் வீழ்த்துவதற்காக இரண்டு விதமான யுக்திகளைக் கையாள்வான். ஒன்று இஸ்லாமியக் கோட்பாடுகள் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில் வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி பாவச் செயல்களில் ஈடுபடச் செய்து வழிகெடுத்து விடுவான். கொஞ்சம் இறை பக்தி ஆத்மீகப் பற்று, வணக்க வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவேரை வழிகெடுப்பதற்கு மற்றொரு வழிமுறையைக் கடைப்பிடிப்பான். அதாவது அவர்களின் மார்க்க அறிவின்மையைப் பயன்படுத்தி இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாம் தடுத்த விஷயங்களை – அவைதான் இஸ்லாமிய அனுஷ்ட்டானங்கள் என நம்ப வைத்து அதன் வழியில் நடக்க வைத்து வழிகெடுத்து விடுவான். இந்த வகையில் ஷைத்தானால் சூழ்ச்சி செய்யப்பட்டு ஆத்மீகத்தின் பெயரால் வழிகெடுக்கப்பட்டவர்களே சூஃபித்துவவாதிகள் எனும் உண்மை ஆரம்ப கால சூஃபிகளில் வரலாற்றைப் படிக்கும் போது தெளிவாகும்.
உண்மையைச் சொல்லப் போனால் சூஃபித்துவ வாதிகள் தமக்கு இருப்பதாக வாதிடும் மறைவானஅறிவு, கஸ்பு,, தரீக்கத், ஹக்கீக்கத், மஃரிபத் ஞானம், ஜத்பு (தன்னை மறந்த நிலை), பனாஃ (கடவுளோடு சஞ்சரித்தல்) இவை போன்ற அனைத்து விவகாரங்களும் இவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தி இவர்களை வழி கெடுப்பதற்காக இவர்களின் சிந்தனையில் ஏற்படுத்தும் குழப்பங்களேயாகும். இவையனைத்தும் அவனின் மாயாஜால யுக்திகளே என்பதை முதலில் தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
சரி விஷயத்துக்கு வருவோம், சூஃபித்துவம் எப்போது ஆரம்பமானது? என்று ஆராயும் போது நபி (ஸல்) அவாகளின் காலத்திலோ அவர்கள் உருவாக்கி விட்டுச் சென்ற ஸஹாபாச் சமூகத்தினர் மத்தியிலோ, அதன் பின் சிறந்த காலத்தினரென நபியவர்கள் உரைத்த தாபியீன்களது காலத்திலோ இவ்வாறான ஒரு வாசகமே உபயோகத்தில் இருந்ததில்லையென்று அடித்துச் சொல்ல முடியும். ஆனால் நபியவர்களின் காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் கூட இன்றைய வழிகெட்ட சூஃபிகள் கொண்டுள்ள கருத்துக்களும், சித்தாந்தங்களும் அக்கால யூத, கிறிஸ்த்தவ, இந்து, கிரேக்க, யூனானிய தத்துவங்களில் நிறைந்து காணப்பட்டதையும், அவை அந்தந்த சமூகத்தில் உள்ள ஒரு பிரிவினரிடம் செல்வாக்குப் பெற்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்ததையும் தெளிவாக அறிய முடியும்.
எனினும் ஆரம்பக் கட்டமாக இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் நபியவர்கள் ஏற்கனவே கூறி வைத்தது போல் பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்பட்ட வேளை இஸ்லாமிய சமூகத்தில் வாழ்ந்த சில நல்ல மக்கள் கூட இப்பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி எவற்றிலுமே சம்பந்தப்படாமல் வாழமுற்பட்டது உண்மை. ஆனால் அவர்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய வரையறைக்குள் இருந்தார்கள். இஸ்லாம் துறவரத்தைப் போதிக்கவில்லை. அதை எதிர்க்கின்றது. ஆனால் அதேவேளை உலக மாயைகளில் அதன் ஆசாபாசங்களில் வீழ்ந்து அதன் அலங்காரங்களில் மயங்கி தனது மறுமை வாழ்வை அழித்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கின்றது.
அல்குர்ஆன் கூறுகின்றது..
اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الأَمْوَالِ وَالأَوْلادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرّاً ثُمَّ يَكُونُ حُطَاماً وَفِي الآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ
அறிந்துகொள்ளுங்கள்! இவ்வுலக வாழ்க்கையானது வீண்விளையாட்டும், கேளிக்கையும், ஆடம்பர – அலங்காரமும், செல்வத்தையும் பிள்ளைகளையும் வைத்துப் பெருமையடித்துக் கொள்வதுமேயன்றி வேறில்லை. எப்படி ஒரு மழையின் மூலம் பயிர்கள் செழித்து வளர்வது கண்டு விவசாயிகள் ஆச்சரியப்பட்ட வேளை பின்னர் அது காய்ந்து மஞ்சள் நிறமாகி பின் சருகாகி விடுகின்றதோ.(இவ்வாறுதான் உலக வாழ்க்கையும்). மறுமையில் (இவ்வுலகில் தீமை புரிந்தோருக்கு) மிகக் கடுமை யான வேதனையும், (நல்லோருக்கு) அவனது கருனையும் மன்னிப்பும் காத்திருக்கின்றன. இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை. (ஸூரா அல்ஹதீத் : 20 )
“நீ உலக வாழ்வில் ஒரு வழிப்போக்கனைப் போன்று அல்லது ஆதரவற்றவனைப் போன்று வாழ்ந்துக் கொள். எனக்கும் இவ்வுலக ஆடம்பரத்திற்கும் என்ன சம்பந்தம்? நான் இளைப்பாறுவதற்காக ஒரு மர நிழலில் தங்கியிருக்கும் வழிப்போக்கனைப் போன்றே இவ்வுலகில் வாழ்கின்றேன்”, என நபியவர்கள் இப்னு உமர் (ரழி) அவர்களுக்கு உபதேசித்திருக்கின்றார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி இப்படிக் கூறுவார்கள் …
காலையில் நீ விழித்தெழுந்தால் மாலை வரை உயிரோடிருப்போமென்று உறுதி கொள்ளாதே. மாலைப் பொழுதை அடைந்து விட்டால் மறுநாள் காலை விழித்தெழுவோமென உறுதி கொள்ளாதே. இவ்வுலகில் வைத்தே மறுமைக்குத் தேவையானதைச் சேகரித்துக் கொள்.
(ஆதாரம்: புகாரி 5937 – திர்மிதி 2299 – இப்னுமாஜா 4099)
எனவே இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் உதுமான் (ரழி) அவர்களது படுகொலைக்குப் பின் குழப்பங்களும் பிளவுகளும், அரசியல் அராஜகங்களும் தோன்ற ஆரம்பித்தபோது சூஃபித்துவம் என்ற பெயரில்லாவிட்டாலும் – முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அறிமுகமான ஒரு இறைபக்திமிக்க கூட்டத்தினர் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட, இஸ்லாம் போதித்த விஷயங்களை மாத்திரம் சமூகத்தின் மத்தியில் முன்வைத்து மக்களை உலக ஆசையிலிருந்து விடுவித்து ஆத்மீகத்தின் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தனர் என்பது உண்மை. அதன் காரணமாகவே அக் காலப் பகுதியில் வாழ்ந்த உலமாக்கள் இமாம்கள் கூட இந்தப் பிரிவினருக்கு ஆதரவு நல்கியதும் உண்மை.
ஆனால் காலப் போக்கிலேதான் அதாவது நபியவர்கள் சிறப் பித்துக் கூறிய மூன்று தலைமுறையினரின் காலத்தின் பின்னரே அன்னிய இந்து, கிரேக்க, யஹூதிய நச்சுக் கருத்துக்கள், விஷமத்தனமான சிந்தனைகளையெல்லாம் பின்வந்த சூஃபிகள் அவர்களது நூல்களின் மொழிபெயர்ப்பிலிருந்து இரவல் பெற்று அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசி சமூகத்தின் மத்தியில் சூஃபித்துவம் எனும் பெயரில் உலவ விட்டு விட்டார்கள். தாம் கோர்வை செய்த நூற்களிலும் இந்த சிந்தார்த்தங்களை விபரித்து அதற்கு உரமூட்டும் விதமாக ஒரு சில குர்ஆன் வசனங்களையும், நபி மொழிகளையும் அவற்றின் விளக்கத்தைத் திரிபுபடுத்திக் கூறி இந்த நச்சுக் கருத்துக்களும் அல்குர்ஆன் ஹதீதுகளில் கூறப்பட்டவைகள்தான் எனப் பாமரர்களையும் நம்பச் செய்து விட்டார்கள்.
இதன் பின்பு வாழையடி வாழையாக இந்த வழிகெட்ட கொள்கையைத் தத்தெடுத்த சூஃபித்துவ வாதிகள் அதிலுள்ள தவறான வழி கெட்ட சித்தார்த்தங்களை நியாயப்படுத்தி அதற்கு வலு வூட்டும் விதமாக குர்ஆன் ஹதீஸ் வசனங்களை வளைப்பதிலும் திரிபு படுத்துவதிலுமே தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அதுமட்டுமின்றி அப்பாஸிய ஆட்சியில் அனேக கிரேக்க தத்துவ நூல்கள் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவற்றிலுள்ள தமது கொள்கைக்குச் சார்பான விஷயங்களையும் அவற்றிலிருந்து திருடி அவற்றைத் தமது சொந்தக் கருத்துக்களாக மெஞ்ஞானம் என்ற பெயரில் பாமர மக்களுக்கும், தமது நூல்களிலும் அறிமுகப்படுத்தினார்கள்.
இங்கு ஒரு கவலைக்குரிய விஷயம் யாதெனில் உண்மையாகவே, சமூகத்தின் மத்தியில் மதிக்கப்பட்ட கஸ்ஸாலி போன்ற சில பேரறிஞர், உலமாக்கள் சிலரும் இந்த வழிகெட்ட சிந்தனையால் உந்தப்பட்டு – கவரப்பட்டு, சிந்தனைக் குழப்பத்துக்குற்பட்டு பின்னர் இக்கொள்கையை ஒருவகையில் அங்கீகரிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். அன்றைய முஸ்லிம் சமூகமே போற்றி வந்த இது போன்ற நல்ல உலமாக்களின் திடீர் மாற்றமே இவ்வழிகெட்ட கொள்கை மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு உரமாக இருந்தது என்பதே உண்மை. கஸ்ஸாலி இமாம் சிந்தனைக் குழப்பத்தில் இருந்த காலப்பகுதியில் கோர்வை செய்த ‘இஹ்யா உலூமுத்தீன் ‘ எனும் ஆத்மீகப் பயிற்சிக்குரிய விஷயங்களை விளக்கும் நூலில் இந்த சூஃபித்துவ அத்வைதக் கொள்கை பற்றி ஆங்காங்கே பகிரங்கமாகக் குறிப்பிட்டிருப்பதையும், இக்கொள்கையுள்ள வழிகேடர்களுக்கு இடம் பெற்ற ஷைத்தானிய சேட்டைகள் சிலதைக் ‘கராமத்’ எனும் பெயரில் தம் நூலில் குறிப்பிட்டிருப்பதையும் அவதானிக்க முடியும். எனவே சமூக ஆதரவுள்ள இவரின் இச்செயல் சமூகத்தின் வழிகேட்டுக்கே பாலம் அமைத்துக் கொடுத்து விட்டது. ‘இஹ் யா உலூமித்தீன்’ மார்க்க அறிவுகளுக்கு உயிரூட்டல் எனும் பெயரில் வெளி வந்த இந்நூல் தூய இஸ்லாமிய மார்க்கத்தையே சாகடிக்கக் கூடிய நஞ்சாக ஆகி விட்டதென்றால் மிகையாகாது.
எனவே அக்கால சூஃபித்துவ வாதிகளின் வழிகெட்ட சித்தாந்தங்களைச் சுருக்கமாகச் சொல்லப் போனால் இவர்கள் தமது அடிப்படைக் கொள்கைகளை நான்கு பிரிவுகளாக வகுக்கின்றனர் இஸ்லாத்தை இவ்வாறு கூறு போட்டு எந்த ஷிர்க்கையும் பித்அத்தையும் அழித்தொழிப்பதற்காக நபியவர்கள் அனுப்பப்பட்டார்களோ அந்தக் குறிக்கோளையே இடித்துத் தரைமட்டமாக்கும் வகையில் இஸ்லாத்தில் விளையாடியிருக்கின்றனர். அவர்களது வழிகெட்ட கொள்கைப்படி பின்வருமாறு இஸ்லாத்தைக்கூறு போட்டிருக்கின்றார்கள்.


சூஃபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள்
1) ஷரீஅத் (மார்க்கம்)
2) தரீக்கத் (ஆன்மீகப் பயிற்சி பெறல்)
3) ஹக்கீக்கத் (யதார்த்தத்தை அறிதல்)
4) மஃரிபத் (மெஞ்ஞான முக்தியடைதல்)
என இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும். இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
1) ஷரீஅத் (மார்க்கம்)
சூஃபிகளிடத்தில் ஷரீஅத் எனப்படுவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற சாதாரண மார்க்க அனுஷ்டானங்களைக் குறிக்கும். இவர்களின் கருத்துப்படி ஆரம்ப நிலையிலுள்ள, உண்மை – யதார்த்தத்தை அறியாத பண்படாத சாதாரண பாமர மக்களுக்குரிய ஆத்மீகப் பயிற்சி நெறிகளே இவ்வகை வணக்கங்களாகும். இவற்றால் மனிதனுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை, நெல்லை மூடியிருக்கும் உமி போன்றதே ஷரீஅத் சட்டங்கள். உள்ளேயிருக்கும் அரிசியைப் போன்றதுதான் ஹக்கீக்கத். ஆரம்பப் பருவத்தில் உள்ளிருக்கும் அரிசியைக் கெடாமல் காக்க உமி அவசியம்தான். எனினும் காலப் போக்கில் கதிர் முற்றியதும் அறுவடையின் பின் உமியை நீக்கித் தூர வீசிவிடுவது போன்று ஹக்கீக்கத்தை அறிந்தவுடன் ஷரீஅத்தை – மார்க்க அனுஷ்டானங்களைத் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்பதே இவர்களின் கோட்பாடு. ஆரம்பத்தில் ஒரு பயிற்சி நோக்கிலேயே இவற்றை ஒருவன் செய்கின்றான். நெல்லின் உள்ளிருக்கும் அரிசியை அடைய விரும்புபவன் உமியைத் தூக்கி வீசிவிடுவது அவசியம் போன்று ஒருவன் யதார்த்தத்தை அறிந்ததும் வெளிப்படையான அமல்களை – மார்க்க அனுஷ்டானங்களை விட்டுவிட வேண்டும் என்பதே இவர்களது கோட்பாடு.
பிரபல சூஃபியான கஸ்ஸாலி இமாம்தான் இவ்வாறான ஒரு கொள்கையை அப்பாவி சமூகத்தின் மத்தியில் புகுத்தி லட்சக்கணக்கான மக்களின் வழிகேட்டுக்குக் காரணமாயிருந்தவர். இவர் ஒரு மார்க்க அறிஞரும் கூட. எனினும் சூஃபித்துவத்தால் கவரப்பட்டு இந்நிலைக்கு ஆளாகிவிட்டார். இவர் இறுதித் தருவாயில் இவ்வழிகெட்ட கொள்கைகள் அனைத்தையும் விட்டு மீண்டு தவ்பாச் செய்து விட்டதாகவும், ஸூன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைக்கு மாறி விட்டதாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் வரலாறு உண்டு என்பது தனி விஷயம். இவர் எழுதிய’ இஹ்யா உலூமுத்தீன்’ எனும் நூல் பிரபலமானது. இதை இவர் நான்கு பகுதியாகப் பின்வருமாறு வகுத்திருக்கின்றார்.
அ- இபாதாத் – வணக்கங்கள்.
ஆ- ஆதாத் – பழக்க வழக்கங்கள்.
இ- முஹ்லிகாத் – மனிதனை அழித்துவிடத்தக்க பாவங்கள்.
ஈ- முன்ஜியாத் – நரகை விட்டும் பாதுகாக்கக் கூடியவைகள்.
இப்படி நான்கு பகுதிகளாகப் பிரித்து விட்டு நான்காவது பகுதி இருக்கின்றதே – அதாவது முன்ஜியாத் – நரகை விட்டும் பாதுகாக்கக் கூடியவைகளின் பட்டியலில் அவர் குறிப்பிடுவது என்ன தெரியுமா? நரகை விட்டும் பாதுகாக்கும் ஒரே வழி தரீக்கத் மாத்திரமே!! தரீக்கத்தை -அதாவது ஆத்மீகப் பாதையை அடைய வேண்டுமா? ஷேக்கிடம் பைஅத் செய், அவருக்கு அடிமையாகு, அவரிலே அல்லாஹ்வைக் காண், அவர் சொல்வதைச் செய். அப்படி நீ தரீக்கத்தின் வழி நடந்தால்தான் உன்னால் ஹக்கீக்கத்தை அடைய முடியும், ஹக்கீக்கத்தை அறிவதுதான் நரகை விட்டும் உன்னைக் காக்கும் என்பதே அதன் விளக்கம். இதன்படி இபாதத்கள், தொழுகை நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்கள் செய்வது எதுவுமே ஒரு முஸ்லிமை நரகை விட்டும் காப்பாற்றாது. மாறாக ஹக்கீக்கத்தைத் தெரிந்தால்தான் சுவர்க்கம் என்பது தான் கஸ்ஸாலியின் கொள்கை என்பது தெளிவாகின்றது.
ஆனால் அல்குர்ஆனிலோ அல்லாஹ் கூறுகையில்..
நரக வாதிகளைப் பார்த்து சுவர்க்க வாதிகள் நீங்கள் நரகத்துக்கு வரக் காரணம் என்ன என்று கேட்ட போது அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்று இவ்வாறு கூறுகின்றான்..
சுவன வாதிகள் நரகுக்குச் சென்ற பாவிகளிடம் ‘நீங்கள் நரகம் வரக் காரணம் யாது’ என்று வினவுவார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் தொழக் கூடியவர்களில் இருக்க வில்லை, ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை, வீணர்களுடன் கூடித்திரிந்தோம், நியாயத் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தோம்’ என்பார்கள். (ஸூரா முத்தஸ்ஸிர் 41)
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே.. நான் கடமையான தொழுகையைத் தொழுது, ரமழானில் நோன்பு நோற்று, ஹலாலானவற்றை எடுத்தும்,ஹராமானவற்றைத் தவிர்ந்தும் வாழ்கின்றேன். இது தவிர வேறு எதுவுமே நான் செய்யவில்லை. இப்படியிருக்க நான் சுவர்க்கம் செல்வேனா? என்று கேட்க நபியவர்கள் ஆம் என்று கூறினார்கள். ( ஆதாரம்: முஸ்லிம்)
இவ்விரு ஆதாரங்களின் மூலமாகத் தொழாதிருத்தல், இபாதத் செய்யாதிருத்தல்தான் ஒருவன் நரகம் செல்லக் காரணமாகின்றது என்பதும் தொழுவதும் இதர இபாதத்களைச் செய்வதும் சுவனம் சேர்க்கும் என்பதும் தெளிவாகின்றது. ஆனால் கஸ்ஸாலியோ தரீக்காவில்; சேராவிட்டால் சொர்க்கமேகிடையாது என்கின்றாரே??
இவ்வாறே கஸ்ஸாலி இமாமவர்கள் அறிவை இரண்டு வகையாகப் பிரிக்கின்றார். உலக அறிவு, மறுமையின் அறிவு என்று. மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் சரிதானே.. இதிலென்ன தவறு என்பார்கள். ஆனால் கஸ்ஸாலி அதற்குக் கூறும் வியாக்கியானத்தைப் பாருங்கள்..
‘உலக அறிவென்பது உலகில் செய்யும் இபாதத், நல்ல கெட்ட காரியங்கள் ஹராம் ஹலால் பற்றிய அறிவாகும். மறுமையின் அறிவென்பது ஹக்கீகத்துடைய அறிவாகும். அதாவது அல்லாஹ் தான் இப்பிரபஞ்சமாக வெளியாகியுள்ளான் எனும் ஹக்கீக்கத்தை–யதார்த்தத்தை சூஃபித்துவப் பாசறையில் தரீக்காவின் வழியில் பயின்று அறிவதே மறுமையின் அறிவாகும். இந்த அறிவு அதாவது (ஹகீக்கத்தை அறிதல்) மறுமை அறிஞர்களின் (சூஃபியாக்களின்) தீர்ப்புப்படி ஒவ்வொருவருக்கும் பர்ழு ஐன் – கட்டாயக் கடமையாகும். எப்படி ஒருவன் உலக அறிவைச் சார்ந்த இபாதத்களைச் செய்யாதவிடத்து உலக உலமாக்களின் தீர்ப்புப் பிரகாரம் அப்பகுதி அரசனின் வாளுக்கு இரையாக நேரிடுமோ அதே போன்று மெஞ்ஞான அறிவான இவ்வறிவைக் கற்காது புறக்கணிப்பவர்கள் மறுமையில் அரசருக்கெல்லாம் அர சனான அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாகி அழிந்துவிட(நரகம் செல்ல) வேண்டியேற்படும் என்று கஸ்ஸாலி சொல்கின்றார். (இஹ்யாஉலூமுத்தீன் பக்கம் 1-114)
இவ்வாறு முதல் கட்டமாக இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள வந்த எதுவுமறியா அப்பாவி முஸ்லிமை அழைத்து அவனுக்குக் குழையடித்து, மூளையைச் சலவை செய்து இவ்வாறான ஷைத்தானிய சிந்தனைகளை ஊட்டி அவர்களைத் தமது தரீக்காவிற்குள் (தரீக்கத்துன்நார் – நரகத்துகின் பாதை என்பதே மிகப் பொருத்தம்) அழைத்துச் செல்கின்றனர். இனி அங்கே என்ன நடைபெறுகின்றது என்று பார்ப்போம்.


தரீக்கத் الطريقة
அன்றைய புராதன சூஃபித்துவ வாதிகள் முதல் இன்றுள்ள நவீன சூஃபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு விஷயம்தான் இந்ததரீக்காவாகும். இதி்ல் பல படித்தரங்கள் உள்ளன. சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றவர் முதலில் ஒரு ஷேக்கிடத்தில் பைஅத் செய்து அவர் சொல்லும் வழியில் நடைபயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர். அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள், புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு தன்னைச் சிரமத்துக்குள்ளாக்கி தன்னைத்தானே வருத்தி ‘அதஹ்’ எனும் பைத்தியம் போன்ற சுய நினைவிழந்த நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும். இதற்கான பயிற்சிகளை அந்த தரீக்காவின் ஷேக்கே முன்னின்று சொல்லிக் கொடுப்பார். இது பற்றி கஸ்ஸாலி இவ்வாறு கூறுகின்றார்..
‘தரீக்கத்தினை அடைவதற்கு கல்வத் (தனித்திருத்தல்), ஜூஉ (பசித்திருத்தல்), ஸஹர்(விழித்திருத்தல்), ஸூம்து(மௌனமாயிரு த்தல்) போன்றன அவசியமாகும்.
( இஹ்யா உலூமுத்தீன் 2-243)
அத்துடன் தனது உடலைத் தானே சிலவேளை வதைத்துக் கொள்ளவும் வேண்டும். இதற்காக நீண்ட நேரம் ஒற்றைக் காலில் நிற்றல், தலைகீழாக நிற்றல், முள்ளின் மீது அமர்தல், நெருப்பால் உடலைப் பொசுக்கல் போன்ற பயிற்சிகளையும் ஷேக்கானவர் மேற்கொள்வார்.
இவர் கூறும் அனைத்தையும் முரீது (சீடர்) எவ்வித மறுப்போ, வெறுப்போ இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது சூஃபித் துவத்தின் பொது விதி. சுருங்கக் கூறின் அவர்கள் கூறுவது போல் ‘ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷேக்கின் முன்னால் மய்யித்தைக் குளிப்பாட்டுபவன் முன் வைக்கப்பட்ட சடலத்தைப் போல் நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கு எந்தவித விருப்பு வெறுப்போ சுய சிந்தனையோ இருக்கக் கூடாது. அவரின் முன் நின்றால் இவனுக்குப் பேச்சே வரக் கூடாது, அவரது அனுமதியின்றி இவன் (தன்மனைவி உட்பட)எவரிடமும் தொடர்பு கொள்வதோ, குர்ஆன்ஓதல், திக்ர்;, அறிவைத்தேடல் போன்ற எவற்றி லுமோ ஈடுபடக் கூடாது.
(அல் அன்வாருல் குத்ஸிய்யா 1- 187)
அபூ யஸீத் அல் புஸ்தாமி எனும் சூஃபி கூறுகின்றார்..
‘ஒரு ஷேக்கானவர் தனது முரீதை ஒரு வேலையின் நிமித்தம் வெளியே அனுப்பினால் அவன் போகும் வழியிலேயே தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் – இந்த முரீதானவன் இப்போது உடனடியாகத் தொழுது விட்டு அதன்பின் அந்த வேலையை முடிக்கலாம்தானே என்று எண்ணிவிட்டால் கூட அவன் ஆழமறியாத ஒருபாதாளக் கிணற்றினுள் வீழ்ந்தவனைப் போலாவான் என்கின்றார். ( ஸத்ஹாத்துஸ் சூஃபிய்யா ப 343)
ஷேக் றிபாயிஃ கூறுவதைப் பாருங்கள்..
‘ஒரு முரீதுக்கு இருக்க வேண்டிய பண்புகளிலொன்றுதான் தனது ஷேக் எப்போதும் நேரிலும், மறைவிலும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக உணரவேண்டும். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஊழியஞ் செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். எந்த வேலையைச் செய்யும் போதும் அவரது நினைவு மனதில் வரவேண்டும். அவர் செய்யும் எந்தவிதமான மோசமான காரியங்களையும் கண்டு அதைக் கண்டிக்கக் கூடாது. ஒரு முறை இப்படித்தான் ஒரு ஷேக்கின் வீட்டுக்கு அவரது முரீதானவர் சென்ற போது தனது ஷேக் ஒரு அழகிய பெண்ணிடம் சல்லாபித்து, அவளைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு உடலுறவில் ஈடுபட்டிருக்கக் கண்டார். இதைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற அவர் அவசரப் பட்டு ‘என்ன காரியம் பண்ணிவிட்டீர்’!! என ஷேக்கைக் கண்டித்து விட்டார்.. உடனே அவர் ஷேக்கிடமிருந்து கற்ற அனைத்து நெறிகளும் அவரிடமிருந்து அந்த இடத்திலேயே பறிக்கப்பட்டுவிட்டன.. (நூல் : கிலாததுல் ஜவாஹிர்; பக்கம் :278)
பிரபல சூஃபி இப்னு அஜீனா கூறுகின்றார்..
ஷேக்குக்கு சிஷ்யன் செய்யும் மரியாதை யாதெனில் அவன் ஷேக்கின் கைகளையும் கால்களையும் முத்தமிட வேண்டும். அவரின் முன் இருக்கும் போது தலை தாழ்த்தி வாய்மூடியிருக்க வேண்டும். முரீதுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டு விட்டால் அவனது மனக் கண்முன் ஷேக்கை முன்னிறுத்தி அவரிடமே தனது நோயை நீக்குமாறு முறையிட வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்தால் அல்லாஹ்வின் உதவியால் சந்தேகமின்றி நிச்சயம் சுகம்கிடைக்கும். . (புதூஹாத்துல் இலாஹிய்யா : 308-309)
வழிகெட்ட சூஃபி ஸஃரானி சொல்வதைக் கேளுங்கள்…
ஒரு ஷேக்கின் மீது உண்மையான அன்பு கொள்வது எப்படியெனில் அல்லாஹ்வுக்காகவே ஒன்றை நேசித்து அவனுக்காகவே ஒன்றை வெறுப்பது போன்றே இந்த ஷேகுக்காகவே எதையும் நேசிக்க வேண்டும் அவருக்காகவே எதையும் வெறுக்கவும் வேண்டும். அவ்வாறே ஷேக்கின் கப்ரைத் தரிசிக்கச் சென்றால் அவர் மய்யித், மரணித்து விட்டவர், நாம் பேசும் எதையும் செவியுற மாட்டார் என எண்ணிவிடக் கூடாது. எனினும் அவர் திரையுலகில் உயிருடன் இருப்பதாகவே நம்ப வேண்டும். அப்போதுதான் அவரது பரக்கத் – அருளைப் பெற முடியும். ஏனெனில் முரீதானவர் ஷேக்கின் கப்ரை ஸியாரத் செய்து அல்லாஹ்வை திக்ர் செய்தால் அந்த ஷேகும் கப்ரில் எழுந்து உற்கார்ந்து கொண்டு இவருடன் திக்ர் செய்கின்றார். இதை நாங்கள் பல தடவைகள் நேரடியாகவே கணகளாலேயே பார்த்திருக்கின்றோம். (அன்வாருல் குத்ஸிய்யா 1-169)
அப்துல் காதிர் ஜீலானி கூறுகின்றார்..
ஷேக்- குருவானவர் வெளிப்படையாகச் செய்யும் எக்காரியத்துக்கும் முரீத் மாற்றஞ்செய்யக் கூடாது. மறைமுகமாகச் செய்யும் விஷயங்களில் குறுக்கீடு செய்து எதிர்க்கேள்வி கேட்கவும் கூடாது. (அல்குன்யஹ் 2- 164)
தொடர்ந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கூறுகையில்..
‘நிச்சயமாக ஷேக்கின் மூலம் ஒருவனுக்கு நன்மையுமுண்டு, தீமையுமுண்டு. தனது ஷேக்கை நேசிப்பது மறுமையில் ஒருவன் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளக் காரணமாகி விடும் இது அவரில் மூலம் கிடைக்கும் நன்மையாகும், அவருடன் முறண்பட்டு வாதம் செய்வது அவனின் நாசத்திற்குக் காரணமாகிவிடும். இது அவரினால் ஏற்படும் தீங்கு. நீ என் கரத் தைப் பிடிப்பதன் மூலமாக வெற்றி பெற வில்லையென்றால் உனக்கு ஒரு போதும் வெற்றியே கிடையாது.
( அல்பத்ஹூர் ரப்பானி)
ஒரு தடவை ஷகீக் பல்கீ, அபூதுராப் ஆகிய இரு சூஃபிகளும் அபூ யஸீத் அல்புஸ்தாமி எனும் சூஃபியிடம் வந்தனர். இருவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அங்கு ஒரு வாலிபன் அவர்களுக்குப் பணிவிடைக்காக இருந்தான். அவ்விருவரும் வாலிபரே.. எம்முடன் வந்து சாப்பிடு என்று கூற அதற்கவன் ‘நான் நோன்பு ‘ என்றான். அதற்கவர்கள் பரவாயில்லை ஒரு மாத நோன்பின் நன்மையைத் தருகின்றோம் வா.. எனக்கூற அதற்கும் அவன் மறுத்து விட்டான். சரி ஒரு வருடகால நோன்பின் நன்மையைத் தருகின்றோம்; வா என்று கூறினர். அவன் அதற்கும் மறுத்து விடவே ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர் ‘அல்லாஹ்வின் பார்வையை விட்டும் விழுந்து விட்ட அவனை அவன் பாட்டுக்கு விட்டு விடுங்கள்’ என கோபத்துடன் கூறினார். இதன் காரணத்தால் அவ்வாலிபர் திருட்டுக் குற்றமொன்றில் பிடிபட்டு அவன்கை துண்டிக்கப்பட்டது.. . ( ரிஸாலா குஷேரிய்யா ப : 151)
ஒரு சீடன் தன் ஷேக்கை நேசிப்பது சரத் – நிபந்தனையாகும் என்பது அனைத்து சூஃபிகளும் ஏகோபித்த விஷயமாகும். எந்தளவுக்கு நேசிக்க வேண்டுமென்றால் தனது ஷேக் அல்லாத எவரும் எதைக் கூறினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது செவிடனைப் போல நடந்து கொள்ள வேண்டும். யார் விமர்சித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அனைவருமே ஒன்று கூடி முயற்சித்தாலும் அவர்களால் இவனை அந்த ஷேக்கை விட்டும் தடுக்க முடியாதளவுக்கு அவனது குருப்பற்று இருக்க வேண்டும். ஷேக்குடைய மகத்துவத்தை மனதில் நிறுத்தி மனக்கண்ணால் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவனுக்குப் பசி, தாகம் எதுவுமே ஏற்படக் கூடாது. ஒரு சீடருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டது. அவர் எதுவும் உண்ணாமல் குடிக்காமல் சதா தன் ஷேக்கையே நினைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அவர் இருந்ததை விடக் கொளுத்து விட்டார்.
(அன்வாருல் குத்ஸிய்யா 1-168)
இது போன்ற சூஃபித்துவ வாதிகளின் தரீக்கத் விதிகளையும் நிபந்தனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறான அபத்தமிக்க பைத்தியகாரத்தனமான இஸ்லாத்திற்கு முறணான, இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்தெறியக்கூடிய கதைகளையும் புராணங்களையும் லட்சக்கணக்கில் சூஃபித்துவ நூல்களில் நீங்கள் காணலாம். விரிவஞ்சி அவற்றைக் குறைத்துக் கொள்கின்றேன். இக்கட்டுக் கதைகளில் பொதிந்திருக்கும் அபத்தங்களை விமர்சிக்க, விபரிக்க முற்பட்டால் புத்தகம் நீண்டு விடும். எனவே அதை வாசகர்களான உங்களின் ஆய்வுக்கு விட்டு விடுகின்றேன். மிகக் குறைந்தளவு இஸ்லாமிய அறிவுடைய ஒரு பாமரன் கூட இக் கருத்துக்கள் இஸ்லாத்தைத் தகர்க்கக் கூடிய மிகப் பெரிய வெடிகுண்டு, இதற்கும் இஸ்லாத்துக்கும் எள் முனையளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை அடித்துச் சொல்வான் என்பது மட்டும் உண்மை.
சுருக்கமாகச் சொல்வதாயின் சூஃபிகளின் தரீக்கத் எனும் இந்த மாயையின் பின்னணியில் ஒரு பெரிய சதிவலையே பின்னப் பட்டிருக்கின்றது. அதாவது அப்பாவிப் பாமரர்கள் மத்தியில் தம்மை விலாயத் பெற்ற இறை நேசச் செல்வர்கள், ஷேக்மார்கள் என அறிமுகப்படுத்தி அப்பாமரர்களை இஸ்லாத்தின் பெயரைக் கூறி ஏமாற்றித் தமது சீடர்களாக்கி ஆத்மீகம் எனும் பெயரில் பொய்களையும் பொய்களையும், அதிசயமிக்க கற்பனைச் சம்பவங்களையும் கூறி மூளைச்சலவை செய்து தன்னைப் பின் பற்றாவிட்டால் வழி கேட்டில் வீழ்ந்து நரகத்துக்குத்தான் செல்ல வேண்டும் எனும் அளவுக்குப் பயமுறுத்தி தாமும் வழி கெட்டு எதுவுமறியா அப்பாவி மக்களையும் வழிகெடுக்கும் ஒரு ஷைத்தானிய ஊடகம் தான் இந்த தரீக்கத் ஆகும்.
இதை விட முக்கியமான பயங்கர விஷயம் யாதெனில் இந்தத் தரீக்கத் வாதிகள் அனைவரினதும் மிக முக்கிய குறிக்கோள் யாதெனில் இஸ்லாத்தையே அழித்து இடித்து வீழ்த்திவிடக் கூடிய இரு கொள்கைளின் பக்கம் தம் சீடர்களை அழைத்து அவற்றைப் போதித்து அதன் மூலம் சுய லாபம் தேடுவதே இவர்களின் அடிப்படை நோக்கமாகும். அவையாவன…
1- வஹ்தத்துல் வுஜூத்: - அத்வைதக் கொள்கை –அதாவது படைப்பினங்களான நாமும் படைத்தவனான அல்லாஹ்வும் ஒன்றுதான்., அவன்தான் பல வடிவங்களில் இப்பிரபஞ்சமாகவும், அதிலுள்ள வஸ்த்துக்களாகவும் காட்சி தருகின்றான் எனும் கொள்கை.
2- அல்ஹூலூல் வல்இத்திஹாத்: அதாவது இறைவன் படைப்பினங்களின் மீது இறங்கி சஞ்சரிக்கின்றான் பின் இறண்டறக் கலந்து விடுகின்றான் எனும் இந்துத்துவ, கிருஷ்தவக் கொள்ளை.
அல்லாஹ் கூறுகின்றான்..
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلاَّ إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ المائدة
‘அல்லாஹ் மூன்று கடவுள்களில் மூன்றாவது கடவுளெனக் கூறிய (அதாவது அல்லாஹ் இயேசுவிலும் அவர் தாயிலும் இறங்க அவர்களும் கடவுளாகி விட்டார்கள் எனக் கூறிய கிருஷ்தவர்கள்) காஃபிர்களாகி விட்டார்கள். ( உண்மைக்) கடவுள் ஒரே கடவுளேயன்றி வேறில்லை. அவர்கள் தாம் சொல் வதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் அவர்களில் (இக் கொள்கை மூலம்) காஃபிர்களாகி விட்டவர்களை கடுமையான வேதனை பிடித்துக் கொள்ளும். அவர்கள் அல்லாஹ்விடத்தில் (தமது இக்கொள்கையை விட்டு விட்டு) தவ்பாச் செய்து பாவ மீட்சி பெற வேண்டாமா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனுமாகஇருக்கின்றான்.. (அல்குர்ஆன் : மாயிதா 73)
எனவே சூஃபிகள் உருவாக்கிய தரீக்கத் எனும் ஷைத்தானியக் கோட்டையிலே ஷேக் எனப்படுபவர்தான் அல்லாஹ்வின் அனைத்து ஆற்றல்கள், சக்திகள், வல்லமைகளும் பெற்றவராகக் கருதப்படுவார். அவரின் சீடர்களுக்கு அவர் குருநாதர் மாத்திரமல்ல கடவுளும் அவர்தான். ஷேகுக்கு தெய்வீகத் தன்மைகள் – கடவுளின் சக்திகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத சிஷ்யன் நிச்சயமாக உண்மையான வெற்றிப் பாதையை அடைந்து கொள்ள மாட்டான். வெற்றிப் பாதையெனப்படுவது இவர்களிடத்தில் வஹ்தத்துல் வுஜூத்-கண்ணால் காண்பதெல்லாம் கடவுளே.. எனும் கொள்கையைக் குறிக்கும். ஆம் நரகத்துக்குரிய இலவச நுழைவுச் சீட்டை வென்று தரும் பாதை இதுதான்.. சந்தேகமேயில்லை. தனது ஷேக், கடவுளின் வல்லமைகள் பெற்றவர்,சக்திமிக்கவர் என எண்ணும் சீடனுக்குக் காலப் போக்கில் ‘ஜத்பு ‘ (பைத்தியம் போன்ற சுய நினைவற்ற) நிலை ஏற்படும்.அதன் பின் அவன் தனது ஷேக்கையே கட வுளாகக் காண்பான் என்பதே தரீக்கத் போதிக்கும் தத்துவமாகும்.
இந்தப் பேருண்மையை?? விளங்கிக் கொள்ளவே தரீக்காவிற்குப் பிரவேசிப்பது அவசியம் அங்கிருந்து நேரே நரகம்தான்!!!.. இதைப் பகிரங்கமாக மக்கள் மத்தியில் சொன்னால் ஷேக்மார்களுக்கு அவர்கள் பைத்தியக் கிறுக்கர்கள் என்று பட்டம் சூட்டி விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.


ப: 192 )
இதுதான் வழிகெட்ட இந்த சூஃபிகள் சொல்லும் ரகசியம்.?? இது வழிகேட்டின் உச்சம், இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப் பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான். இது சுத்த பைத்திய காரர்களின் உளறல். முற்றிய பைத்தியம் என்பதைச் சாதாரணவன் கூடச் சொல்வான். அல் குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர், கலப்பற்ற ஷிர்க் என்று விவரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும்.




மஃரிபத்  (மெஞ்ஞானம் ) المعرفة
சூஃபிகளின் கூற்றுப்படி தேவையற்ற சரீஅத் சட்டங்களால் தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்ட ஒரு மனிதன் ஒரு சூஃபிக் குருவின் சீடனாகி தரீக்கத் எனும் சேற்றினுள் விழுந்து மூளையையும் சுய சிந்தனையையும் பறிகொடுத்து பின்னர் ஹக்கீக்கத் எனும் மாயையில் வீழ்ந்து புலம்ப ஆரம்பித்ததும்  அளவுக்கதிகம் இறை நினைவில் (!?)  (சூஃபிகளின் இறைவனான ஷைத்தானின் நினைவில் மூழ்கியதால்) ‘பனாஃ’ எனும் நிலை ஏற்படுமாம். இதற்கு இறை நினைவால் மூழ்கி தன்னையே அழித்துக் கொள்ளல் (அதாவது தன்னிலை மறந்து விடும் நிலை) என்று சூஃபிகள் வாதிடுகின்றனர்.
உண்மையில் இது போதை மயக்கத்தில் பேதலித்து விடுவதால், அல்லது ஊன் உறக்கமின்றி சதா காலமும் ஏதோ ஒன்றை நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பதால் ஏற்படும் ஒரு வகை மூளைக் குழப்பம் அல்லது பைத்தியத்தின் ஆரம்ப நிலை என்பதில் சந்தேகமில்லை.  அனைவரையும் விட அல்லாஹ்வுக்கு விருப்பமான, அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்த,  இபாதத், வணக்கம் உட்பட அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரியாக அனுப்பப்பட்ட முஹம்மத் நபியவர்களுக்கே இவ்வாறான ஒரு நிலை ஏற்படவில்லையே.. இப்படியொரு பனாஃ நிலைக்குக் சென்று இவர்களைப் போல் உளற வில்லையே.. நபியவர்களை விட இந்த சூஃபிகள் இறை நேசர்களா? அவர்களை விடக் கடுமையான வணக்கவாளிகளா ? அவர்களுக்குத் தெரி யாத ஹக்கீக்கத்தை ( ரகசியத்தை ) இவர்கள் தெரிந்து கொண்டார்களா ?
நபியவர்களின் ஆத்மீகப் பாசறையில் பயிற்சி பெற்ற லட்சக் கணக்கான ஸஹாபாக்களில் ஒருவருக்கேனும் இப்படியொரு நிலை ஏற்பட்டுப் புலம்பியதாக வரலாறு உண்டா? அப்படி  இந்த சூஃபிகள் நிரூபிப்பார்களா?  அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக அல் குர்ஆனிலேயே விளம்பரப்படுத்தப்பட்ட அந்த இறைநேசர்களுக்குக் கற்பிக்காத ரகசியத்தை இந்த சூஃபிகளுக்கு கற்றுக் கொடுத்தானா?  இந்த வினாக்களுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளான்.
சரி…. விஷயத்துக்கு வருவோம்..
இப்போது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அல்லாஹ்வின் பிரதிபலிப்பே.. தூணும் அவனே துரும்பும் அவனே, வானமும் அவனே வையமும் அவனே, நீயும் அவனே நானும் அவனே எனும்  ரகசியம் அவருக்குப் புலப்பட ஆரம்பித்ததும் அவருக்கு அனைத்து வித மறைவான ஞானங்களும் புலப்பட ஆரம்பிக்கும்.  இவரே முன் கூட்டியே கடவுளாக இருந்திருந்ததன்; ரகசியத்தை இப்போது இவர் கண்டு கொண்டதால் கடவுளின் ஆற்றல், அறிவு வல்லமை மறைவான ஞானம் அனைத்தும் இவருக்கும் வந்து விடும். இதற்குத்தான் இவர்களிடத்தில் மஃரிபா மெஞ்ஞான முக்தி பெறல் எனப்படும். இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரிபீன்கள் மெஞ்ஞான வான்கள் எனும் பெயர் சூட்டப்படும்.
அப்துல் அஸீஸ் தப்பாக் எனும் அண்மைக்கால சூஃபி ஒருவர் கூறுகின்றார்..
‘அல்லாஹூத்தஆலா தான் யாரென்ற மஃரிபா ஞானத்தை ஒருவருக்குக் கொடுக்கும் வரை எவரையும் நேசிப்பதில்லை. அந்த ஞானம் பெற்றதும் அவர் அல்லாஹ்வின் ரகசியங்களையெல்லாம் காண ஆரம்பிப்பார். அப்போது அவருக்கு ஜத்பு எனும் இறை ஈர்ப்பு நிலை ஏற்படும். ( இப்ரீஸ் ப: 217  )
இல்லை! உண்மையில் இது தேவையற்ற சிந்தனைக் குழப்பத்தாலும், அளவுக்கதிகமான திக்ர் எனும் பெயரில் அரங்கேற்றிய பேயாட்டத்தாலும் ஏற்பட்ட காக்காய்வலிப்பு நோய்தான் இது!.
அதாஉல்லாஹ் இஸ்க்கந்தரி எனும் சூஃபி மகான்?? கூறுகின்றார்…
‘மஃரிபா –ஞானமென்பது ஒரு கற்கக் கூடிய அறிவல்ல. அது நேரடியாகக் காணும் ஒரு நிகழ்வாகும், அது சொல்லித் தெரியும் ஒன்றல்ல, அது வர்ணிக்க முடியா ஒரு ரசனைமிகு ஓவியம், திரையிடப்படாத ஒரு காட்சி. இதைக் கண்ணுற்றவர்கள் ஏனை யோரைப் போன்றல்ல, ஏனையோர் கண்ணுற்றோரைப் போன்று மல்லர்.
மஃரிபா எனும் ஞானம் பெற்ற ஆரிபீன்களிடத்தில் அல்லாஹ் அல்லாத எப்பொருளும் இருக்கின்றதென்றோ இல்லையென்றோ சொல்லப்பட மாட்டாது. ஏனெனில் அவனே  எல்லாம் என்பதே உண்மையாதலால் அவனல்லாத எதுவும் இல்லையென்பது தெளி வாகின்றது. (கஸ்புல் அஸ்ரார். ப: 139)
எதுவுமறியா அப்பாவிப் பாமர சமூகம் சூஃபி மகான்கள், மெஞ்ஞான குருநாதர்கள் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஷைத்தானின் தூதர்களான கேடுகெட்ட இந்த சூஃபிகளின் அந்தரங்கம் இதுதான். குப்ரையும் ஷிர்க்கையும் பாமரர்கள் மத்தியில் பெயரை மாற்றி மெஞ்ஞானம் எனும் போர்வையில்  விதைத்து நரகத்தின் நாயகனான ஷைத்தானின் அணிக்கு ஆள் சேர்ப்பு செய்து ஷைத்தானின் நேசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போட்டு பசுந்தோல் போர்த்திய புலிகள் போன்று சமுகத்திலே ஊடுருவிய, இப்போதும்  ஊடுருவியிருக்கும் இந்தக் கேடு கெட்டவர்களை அனைவரும் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும். இவர்களைப் பற்றி சமூகத்தின் மத்தியில் உள்ள கற்பனை கருத்தோட்டத்தைக் களையெடுத்து இவர்களின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். இது ஒவ்வொரு முஃமினதும் இஸ்லாமிய, தார்மீகக் கடமையாகும்.